2012 : புலம் பெயர் தொழிலாளிகளின் வேதனை ஆண்டு- அ.மார்க்ஸ்

{இந்த இதழ் ஆனந்தவிகடனில் இதன் சுருக்கப்பட்ட வடிவைக் காணலாம்}    சென்ற ஆண்டு விடியும்போதே யாருக்காவது தீய சகுனத்துடன் விடிந்ததென்றால் அது புலம்பெயர்ந்து வந்து இங்கே பல்வேறு அடிமட்டப் பணிகளில் உள்ள ‘வட மாநிலத் தொழிலாளிகளு’க்குத்தான். தமிழ் நாட்டில் எங்கு போனாலும் நீங்கள் இவர்களைக் காண முடியும். தமிழகம் முழுவதும் இப்படி எத்தனை பேர் இருக்கிறார்கள் என்று கேட்டால் யாராலும் சரியாகச் சொல்ல இயலாது. அரசிடம் உரிய தகவல் இல்லை. பத்து இலட்சம் பேர் வரை இருக்கலாம். [...]

தமீம் அன்சாரி மீது தேசியப் பாதுகாப்புச் சட்டம் போடப்பட்டது சரிதானா?- அ.மார்க்ஸ்

தேசியப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் குண்டர் சட்டம் தொடர்பான அறிவுரைக் குழுமம் முன் பணிந்து  அளிக்கப்படுகிறது   இலங்கை வழியாக இராணுவ இரகசியங்களைப் பாகிஸ்தானுக்குக் கடத்தியதாகக் கைது செய்யப்பட்டு சென்ற 17.09.2012 முதல் நீதிமன்றக் காவலில் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த தஞ்சையைச் சேர்ந்த தமிமுன் அன்சாரியைத் (த/பெ: அப்துல் ரஹ்மான்) தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் (1980) 3(1)(a) பிரிவின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகச் சென்ற 05-12-2012 அன்று பொது (சட்டம் & ஒழுங்கு) துறை செயலர் [...]

குற்றமும் தண்டனையும் – அ.மார்க்ஸ்

நேற்று நான் முகநூலில் இட்ட பதிவு (“அந்தக் கணநேரம்”) நிறைய விவாதங்களுக்கு இடமளித்துள்ளது. நல்லது. டெல்லியில் நடந்த கொடுமை குறித்த உணர்ச்சிவயப்பட்ட எதிர்ப்பு ஒன்று எழுந்துகொண்டுள்ள சூழலில் இப்படியான ஒரு பதிவைச் செய்தது அத்தனை புத்திசாலித்தனமான செயல் அல்ல என நான் அறிவேன். குறிப்பாகப் பெண்கள் இது குறித்து என்னைக் கண்டித்ததின் நியாயங்களை நான் முழுமையாக ஏற்கிறேன். டெல்லி வன்முறைக்கு உருவாகியுள்ளது போன்ற எதிர்ப்புகள் நியாயமானவை. வரவேற்கப்படவேண்டியவை என்பதில் எனக்குக் கருத்து மாறுபாடில்லை.இப்பிரச்சினை குறித்து நேற்று புதிய [...]

பரமக்குடி மூன்று பேர் கொலையும் காவல்துறையின் தேடுதல் வேட்டையும் – அ.மார்க்ச்

சென்ற அக்டோபர் 30, தேவர் குரு பூஜை நாளில் பரமக்குடிக்கருகில் மூவர் கொல்லப்பட்ட சம்பவம் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. 1992 அக்டோபர் 27 அன்று நடந்த சமாதானக் கூட்டத்தில் செய்துகொண்ட ஒப்பந்தப்படி குரு பூஜை அன்று செல்வதற்குத் தடுக்கப்பட்ட வழியே சென்ற ஒரு வாகன ஓட்டுனர் கொல்லப்பட்டவர்களில் ஒருவர். மற்ற இருவரும் இருசக்கர வாகனம் ஒன்றில் அதிவேகமாகச் சென்று, வேகத் தடையில் தூக்கி எறியப்பட்டு வீழ்ந்தவர்கள். குற்றுயிராகக் கிடந்த அவர்கள் கல்லால் அடித்துக் கொல்லப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எப்படியாயினும் இப்படியான [...]

மானாமதுரை இரட்டை என்கவுன்டர் – உண்மை அறியும் குழு அறிக்கை

மதுரை, 05-12-2012 சென்ற அக்டோபர் 27 அன்று மானாமதுரைக்கு அருகில் உள்ள வேம்பத்தூரில் மருதுபாண்டியர் குரு பூஜைக்குச் சென்று வந்த கும்பல் ஒன்றுக்கும் காவல்துறைக்கும் ஏற்பட்ட உரசலின்போது குடிபோதையில் இருந்த இளைஞர்கள் தாக்கி சம்பவ இடத்திலேயே திருப்பாச்சேத்தி கவல் நிலைய உதவி ஆய்வாளர் ஆல்வின் சுதன் கொல்லப்பட்ட செய்தி எல்லோரையும் கவலையில் ஆழ்த்திய ஒன்று. சாதித் தலைவர்களின் குருபூஜை என்கிற பெயரில் உருவாக்கப்படும் சாதி உணர்வுடன் கூடிய கும்பல் மனநிலை மற்றும் வன்முறை உளநிலைக்கு ஒரு இளம் [...]

அசாம் வன்முறையும் அகதி வாழ்வும் – உண்மை அறியும் குழு அறிக்கை

[இன்று அசாம் தலைநகரம் கவுஹாத்தியில் வெளியிடப்பட்ட எமது இடைக்கால அறிக்கை} Press  Release   Guwhati,                                                                                       [...]

மார்க்சிஸ்ட் கட்சி, மயிலை பாலு மற்றும் தீகதிருக்கு என்ன ஆச்சு? – அ.மார்க்ஸ்

மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘தீக்கதிர்’ என்மீது இரண்டாம் முறையாகப் பாய்ந்துள்ளது. குமுதத்தில் அன்வர் என்பவர் எழுதிய  கட்டுரை ஒன்றில் அவர் ஏன்னிடம் செல்பேசியில் கேட்டு எழுதிய கருத்து ஒன்றிற்காகத் தாண்டிக் குதித்துள்ளார் தோழர் மயிலை பாலு ( ‘தீக்கதிர், நவம்பர், 2012)’. பொதுவாக அவர் இப்படியெல்லாம் தாண்டிக் குதிப்பவர் அல்ல. ஆனால் கொஞ்ச காலமாக அவருக்கு ஏதோ பிரச்சினை. அப்படித்தான் சிலநாட்கள் முன் பாரதி புத்தகாலயம் நடத்திய ரெக்சின் நூல் வெளியீட்டு விழாவில் மூத்த கட்சிக்காரரும், பத்திரிக்கை [...]

திராவிடமா? தமிழியமா? மருத்துவர் இராமாதாசின் தமிழியம் – அ.மார்க்ஸ்

உ.பி மாதிரியில் இங்கே ஒரு சமூகப் பொறியியல் ஒன்றைக் கட்டமைக்கப் போவதாக நேற்று சேலத்தில் விரிவாகப் பேட்டியளித்துள்ளார் மருத்துவர் இராமதாஸ். திராவிடக் கட்சிகளாலும், அவர்கள் பேசிய ‘திராவிடம்’ என்கிற கருத்தியலாலுந்தான் தமிழர்கள் இன்று தாழ்ந்துள்ளனர் எனக் கூறியுள்ள இராமதாஸ் அவர்கள், தனது இந்தச் சமூகப் பொறியியல் திராவிடத்திற்குப் பதிலாகத் ‘தமிழியத்தை’ முன்வைக்கும் என்றுள்ளார். இனி இரண்டு திராவிடக் கட்சிகளுடன் மட்டுமல்ல, திராவிடம் என்று பெயர் தாங்கியுள்ள எந்தக் கட்சியுடனும் கூட்டில்லை எனச் சமீபகாலமாகச் சூளுறைத்து வரும் மருத்துவர், [...]

தருமபுரி மாவட்டத்தில் தலித்கள் மீது தாக்குதல்: உண்மை அறியும் குழு அறிக்கை

தர்மபுரி மாவட்டத்தில் தலித்கள் மீதான வன்கொடுமைத் தாக்குதல் உண்மை அறியும் குழு அறிக்கை தருமபுரி                                                                                         [...]

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகள் திரும்புவரோ இலங்கைக்கு? அ.மார்க்ஸ்

[கொழும்பு வீரகேசரி நிறுவனத்தின் மாதமிருமுறை வெளியீடான “சமகாலம்” இந்த இதழில் வெளிவந்துள்ள கட்டுரை.முகாம்களில் வாழும் ஈழ அகதிகள் எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளும் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன.] சென்ற அக்டோபர் 20 அன்று சென்னையிலுள்ள இலங்கைத் துணைத் தூதுவர் ‘விசேட கொன்சியுலர் சேவை’ ஒன்றை நடத்தினார். தமிழக அரசின் அகதிகள் மறுவாழ்வுத் துறை மற்றும் சந்திரஹாசனின் ‘ஆஃபர்’ தொண்டு நிறுவனம் ஆகியவற்றின் துணையுடன் நடத்தப்படும் இரண்டாவது விசேட சேவை இது. முதல் விசேட சேவை சென்ற ஜூன் 2 அன்று [...]